சென்னை காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய வாலிபர்

வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (21:28 IST)
சென்னை ராயபுரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.


 

 
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த உதயகுமார்(25) என்பவர் மீது தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் காவல் நிலையங்களில் செல்போன் வழிப்பறி வழக்குகள் உள்ளன. வழக்கு தொடர்பாக சிரையில் அடைக்கப்பட்டிருந்த உதயகுமார் நேற்று வேளியே வந்தார்.
 
ராயபுரம் போலீஸ் நிலையத்தில் மட்டும் உதயகுமார் மீது 3 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில் செல்போன் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ராயபுரம் காவல்துறையினர் உதயகுமாரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர்.
 
அப்போது உதயகுமார் திடீரென்று காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்