குளிப்பதை செல்போனில் படம் பிடித்து மிரட்டல் : இளம்பெண் தீக்குளிப்பு

வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (18:04 IST)
குளிப்பதை செல்போனில் படம் பிடித்து மிரட்டியதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 

 
தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மகாலட்சுமி (35). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் ஆரோக்கியநாதபுரத்தில் வசித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மகாலட்சுமி வீட்டிலுள்ள குளித்து கொண்டிருந்ததை, அவர்களது வீட்டு மாடியில் வசித்து வந்த இளைஞர், அவரது சித்தப்பா மகன் ஆகியோர் செல்போனில் படம் எடுத்துள்ளனர்.
 
மேலும், இளைஞர்கள் இருவரும் அடிக்கடி மகாலட்சுமியிடம் படம் பிடித்ததைக் காட்டி ஆபாசமாக பேசியும், மிரட்டியும் வந்துள்ளனர். இதனால் மகாலட்சுமி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
 
இதில் பலத்த காயமடைந்த அவரை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், நெல்லை சந்திப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆகியோரை தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்