போரூர் அடுத்த சின்னப்போரூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (23). இவர், கடந்த 06-10-2012 மோகனசுந்தரம் தனது நண்பர்களான ஜான்சன், சதீஷ் (24), துரைராஜ் (21), பாலு (25) ஆகியோருடன் மவுலிவாக்கத்தில் நடந்த கபடி போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
வரும் வழியில் அங்குள்ள ஓட்டல் ஒன்றிற்கு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது பாலு, தனக்கு சிக்கன் வேண்டும் என்று நண்பர்களிடம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அதற்கு மோகனசுந்தரம், தற்போது யாரிடமும் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி, பாலு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார். மேலும் அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் ஒருவருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.