இளைஞர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்..

சனி, 11 மார்ச் 2023 (20:06 IST)
ஈரோடு மாவட்டம் பவானி அருகே இளைஞர்  மீது இளம்பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே  இன்று இளம்பெண் ஒருவர்,  கார்த்திக் என்ற இளைஞர் மீது ஆசிட் வீசியுள்ளார். இதில், படுகாயமடைந்த கார்த்தி படுகாயமடைந்த நிலையில், அங்குள்ள தனியார் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு இளம்பெண்  காதல் விவகாரத்தில்  கார்த்தி மீது ஆசிட் வீசினாரா  என்ற கோணத்தில்  விசாரித்து வருகின்றனர்.

ஆசிட் வீசிய பெண் தலைமறைவான   நிலையில், அவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்