இதனையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாகி மாறியுள்ளது. இவர்கள் கடந்த ஒன்றரை வருடகாலமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த பத்து மாதத்திற்கு முன்பு நிறைமதி தனியாக இருந்தபோது இருவரும் உறவில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் நிறைமதி கர்ப்பமடைந்துள்ளார். இதனை நிறைமதி சிவசங்கரனிடம் கூறியபோது, கருவை கலைத்துவிடுமாறு கூறியுள்ளார். மேலும், தனது அண்ணனுக்கு திருமணம் நடைபெற்ற பிறகு தான் தமக்கு திருமணம் நடைபெறும் என கூறியுள்ளார்.
ஆனால், கர்ப்பத்தை கலைக்காத நிறைமதிக்கு கடந்த 24ஆம் தேதி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்த தகவல் தெரிந்த பிறகும் திருமணம் சிவசங்கரன் செய்ய மறுத்து வந்துள்ளார்.
இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை, பிறந்து 4 நாளே ஆன கை குழந்தையுடன் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து ஆய்வாளர் மங்கையர்கரசி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, நிறைமதியின் கழுத்தில் சிவசங்கரன் தாலி கட்டினார்.