இதற்கிடையில், வினோத் அதே பகுதியைச் சேர்ந்த சுலோச்சனா என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளார். மேலும், இருவரும் பல நேரங்களில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதில் இளம்பெண் சுலோச்சனா மூன்று மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால் திருமணம் செய்து கொள்ளும்படி வினோத்தை சுலோச்சனா வற்புறுத்தி உள்ளார். ஆனால், வினோத் தொடர்ந்து மழுப்பிவர, அதிர்ச்சியடைந்த சுலோச்சனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்துகொண்ட காவல் துறையினர் வினோத்தை கைது செய்தனர்.