கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, திடீரென்று மேடை ஏறிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தமிழ் மாநில கட்சியில் இணைவதாக அறிவித்தார். அவருக்கு கட்சி நிறுவனர் ஆர்.சி.பால்கனகராஜ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் பேசிய கட்சி நிறுவனர் ஆர்.சி.பால்கனக ராஜ், “67ஆம் ஆண்டு முதல் திராவிட கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். ஊழலை ஒழிக்க மிகப்பெரிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் உருவாக வேண்டும். இதற்கு தமிழ் மாநில கட்சி பாடுபடும்” என்றார்.
இதுவரை தமிழ் திரைப்படங்களில் மக்களை விழுந்து, விழுந்து சிரிக்க வைத்த பவர் ஸ்டார் சீனிவாசன், இனி மக்களுக்காக அரசியல் பணியை மேற்கொள்ள இருக்கிறார்.