மடத்தனமாக யோசிக்கும் நடிகையின் கணவர் – இணையதளத்தில் விழும் திட்டு

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (15:15 IST)
காதல் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சந்தியா.


 


2015 ஆம் ஆண்டு, சென்னையே வெள்ளத்தில் மூழ்கி  இருந்த நேரத்தில், சத்தமில்லாமல், ஐ டி துறையை சேர்ந்த வெங்கட் சந்திரசேகரன் என்பவரை, அவர் திருமணம் செய்துக்கொண்டார்.

தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவருக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறுயுள்ளனர். இந்நிலையில், சந்தியாவின் பிறந்த நாள் செப்டம்பர் 26 ந்தேதி  என்பதால்,  தன் குழந்தையை மனைவியின் பிறந்த நாள் அன்று, ஆபரேஷன் செய்து எடுத்துவிடலாம் என்று அவர் கணவர் சொல்லி இருக்கின்றார்.

இந்த யோசனைக்கு, பலர் இணையதளங்களில் எதிர்ப்பு தெரிவுத்தும், வெங்கட் சந்திரசேகரனை திட்டியும் கருத்துக்கள் பதிவு செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்