ஜெயலலிதாவை பார்க்க சூலாயுதத்துடன் நுழைய முயன்ற பெண்: அப்பல்லோவில் பரபரப்பு!

புதன், 28 செப்டம்பர் 2016 (11:56 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலம் குணமாகி உள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.


 
 
இதனையடுத்து முதல்வரை பார்க்க அப்பல்லோ மருத்துவமனை முன்பு தினமும் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கையில் சூலாயுதத்துடன், கழுதில் ருத்ராட்ச மாலையுடன் பெண் ஒருவர் அப்பல்லோ மருத்துவமனையில் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
மருத்துவமனை வாசலில் நேற்று வந்த அந்த பெண் திடீரென பக்தி பரவசத்துடன் ஆடி அருள்வாக்கு கூறியுள்ளார். பின்னர் ஆவேசமடைந்த அவர் மருத்துவமனையில் நுழைய முயற்சித்தார், இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
 
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் அழகாபுரத்தை சேர்ந்த அருள்வாக்கு ஜெயந்தி என தெரியவந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்