சம்பவம் குறித்து காயத்ரியின் கணவர் ஆறுமுகம் கூறியதாவது,
தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய எனது மனைவி காயத்ரியை டி.எஸ்.பி. தனது வீட்டு வேலைகளை செய்யுமாறு உத்தரவிட்டாராம். அதுமட்டுமின்றி கடந்த சில தினங்களாக எனது மனைவிக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்பத்தியுள்ளார். இந்நிலையில் ஒருநாள் திடீரென போன் செய்த டி.எஸ்.பி என் மனைவியை திட்டினார். உடனடியாக நான் மனைவியிடமிருந்து போனை வாங்கி, என்ன இப்படி பேசுறீங்க என்று கேட்டபோது திடீரென போன் இணைப்பை துண்டித்து விட்டார். எனவே அந்த அதிகாரியின் கடுமையான டார்ச்சர் காரணமாகவே எனது மனைவி உயிரிழந்தார் என்று கூறினார்.