திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு அருகே மத்திம வயது பெண் ஒருவர் சாலையில் நின்றுகொண்டு அங்கு வரும் வாகனங்களை போக்குவரத்தை சீர் செய்வது போல நடந்துகொண்டார். இதனால் அவர் குடிபோதையில் இருக்கிறார் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர் என மக்கள் நினைத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால் அவர் யாராவது கிட்டே வந்தால் மொத்த துணிகளையும் அவிழ்த்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.