அதிமுக கட்சியிலிருந்து விலகுவதாக தினகரன் அறிவித்ததை அடுத்து ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்போடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அமைச்சர்களும் ஓபிஎஸ் அணியுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என கூறியுள்ளனர்.
அதிமுக கட்சியிலிருந்து ஒதுங்கி விட்டதாக டிடிவி தினகரன் பேட்டியளித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், சசிகலா குடும்ப ஆதிக்கத்திலிருந்து அதிமுகவுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் முதல் வெற்றி கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்போடு பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று கூறினார்.