அயூப் அலி, ரம்ஜான்கனி தம்பதியதற்கு 2 குழந்தைகள் உள்ளன. ரம்ஜான்கனி செல்போன் பேசுவதையும், வாட்ஸ்ஆப் உபயோகிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் வாட்ஸ்ஆப் உபயோகித்ததால் அயூப் அலி அவரது மனைவி ரம்ஜான்கனியை கண்டித்ததுடன், அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரம்ஜான்கனி சண்டையிட்டு தன் பெற்றோர் வீட்டுக்கு செல்ல ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.