முருகன் குடித்துவிட்டு போதையுடன் வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இதே போன்ற தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த முருகன் மனைவியை அவரது தாலிக் கயிற்றால் இறுக்கியுள்ளார். தாலிக்கயிறு கழுத்தை இறுக்கியதுடன், கழுத்தை அறுத்ததால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அழகு உயிரிழந்தார்.