செல்போனில் பேசாத கணவர் : தற்கொலை செய்து கொண்ட மனைவி

திங்கள், 8 பிப்ரவரி 2016 (12:06 IST)
செல்போனை கணவன் எடுக்காததால், விரக்தியடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாகர்கோவிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நாகர்கோவிலில் வசித்து வருபவர் ராம்கி. இவரின் ஐந்து வருடங்களுக்கு முன்பு அஜிதா(24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு  ஸ்ரீஜெய் என்ற மகன் இருக்கிறான்.
 
ராம்கி எலெக்ட்ரீசியனாக வேலை செய்கிறார். அவர் தினமும் இரவில் தாமதாக வீட்டிற்கு வருவதாகவும், அதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.
 
இப்படி ஏற்பட்ட சண்டை  காரணமாக, கடந்த இருநாட்களாக இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெகுநேரம் ஆகியும் ராம்கி வீட்டிற்கு வரவில்லை. எனவே அஜிதா அவருடைய செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் ராம்கியோ தொடர்ந்து அஜிதாவின் அழைப்பை மறுத்து துண்டித்ததாக கூறப்படுகிறது.
 
இதனால் மனமுடைந்த அஜிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவில் தாமதமாக வீட்டிற்கு வந்த ராம்கி, இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி போலிசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
 
அவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் மட்டுமே ஆகியிருப்பதால், ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்