இப்படி ஏற்பட்ட சண்டை காரணமாக, கடந்த இருநாட்களாக இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெகுநேரம் ஆகியும் ராம்கி வீட்டிற்கு வரவில்லை. எனவே அஜிதா அவருடைய செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் ராம்கியோ தொடர்ந்து அஜிதாவின் அழைப்பை மறுத்து துண்டித்ததாக கூறப்படுகிறது.