ஆனால் அவர் கூறியது உண்மையா என்பதை விசாரிக்க உளவுத்துறையிடம் ஜெயலலிதா கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உளவுத்துறை அளித்த தகவலில், திருச்சி சிவாவும், சசிகலா புஷ்பாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவுக்கு பணம் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து தான் கொடுத்த பணத்தைக் கேட்க சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவை தொலைப்பேசியில் தொடர்புகொண்ட போது அவர் அதனை எடுக்கவில்லை. இந்நிலையில் விமான நிலையத்தில் திருச்சி சிவாவை நேரில் பார்த்த சசிகலா புஷ்பா அவரால் தனக்கு கெட்டப்பெயர் உருவாகி கட்சியில் பதவி பறிபோகும் நிலையில் உள்ளதால் உணர்ச்சிவசப்பட்டு தாக்கினார் என உளவுத்துறை கூறியதாக தகவல்கள் வருகின்றன.