தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதிமுகவில் தொண்டர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருப்பமனு பெறப்பட்டது. மேலும், கூட்டணிக் கட்சி தலைவர்கள் சந்திப்பை நேற்று ஜெயலலிதா நடத்தினார்.
இந்த நிலையில், அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலலிதா விரைவில் வெளியிடப்போவதாகவும், சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை ஏப்ரல் 2 ஆம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.