அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் மறைவு எனக்கு அரசியல்ரீதியாக பேரிழப்பாகும். என்னை அரசியலில் உருவாக்கிவிட்ட ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றபோது போலீஸ் நடத்திய விதம் வேதனையளித்தது. ஒரு எம்பி என்றும் பாராமல் என்னை போலீஸார் கீழே பிடித்து தள்ளினர். அத்தனை தடைகளையும் மீறி என் தாயை தரிசித்துவிட்டு வந்தேன் என்றார்.