தமிழக சட்ட மன்றத் தேர்தல் - நாங்க ரெடி: தமிழிசை சவுந்தரராஜன்

ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (22:37 IST)
தமிழக சட்ட மன்றத் தேர்தல் பணியை பாஜக ஏற்கனவே துவங்கிவிட்டது என தமிழக பாஜக  தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
சென்னை வேளச்சேரியில், ரக்ஷாபந்தன் பண்டிகையை, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் துவங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
ரக்ஷாபந்தன் பண்டிகையின் போது, காப்பு கயிறு கட்டும் போதே, காப்பீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். அதை நாங்கள் மகிழ்ச்சியோடு செயல்படுத்தி வருகின்றோம்.
 
அதன்ஒரு பகுதியாக,  தமிழகத்தில் ரக்ஷாபந்தன் கொண்டாட்டத்தின் போது காப்புக் கயிறு கட்டும் போது, ரூ.2 லட்சத்திற்கான காப்பீட்டை பரிசாக வழங்குறோம்.
 
மேலும், தமிழக தேர்தல் குறித்து கூறவேண்டும் என்றால், தமிழக சட்ட மன்றத் தேர்தல் பணிகளை, பாஜக ஏற்கனவே துவங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும். தேர்தல் எப்போது வந்தாலும், அதை நாங்கள் தைரியமாக சந்திக்க தயாராக உள்ளோம் என்றார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்