நேற்று அணைக்கு 1539 கனஅடி நீர்வந்தது. இன்று 2246-ஆக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1311 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் முழுவதும் வைகை அணையை வந்து சேருகிறது. எனவே வைகை அணையின் நீர்மட்டம் 44.36 அடியாக கூடியுள்ளது. அணைக்கு 1039 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர் குடிநீருக்குகாக 40 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
நேற்று பெய்த மழையளவு வருமாறு:-
பெரியாறு 34.8 மி.மீ, தேக்கடி 10.6 மி.மீ, கூடலூர் 3 மி.மீ, உத்தமபாளையம் 10 மி.மீ, மஞ்சளாறு 7 மி.மீ, சோத்துப்பாறை அணை 3 மி.மீ தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.