இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இங்கிருந்து தான் தினமும் சென்னைக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது. தற்போது வீராணம் ஏரி தண்ணீர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவை மூலம் பெறப்படும் தண்ணீர்தான் சென்னை குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்கிறது.