மேலும், இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரத்தை கட்சிகள் முடிக்க வேண்டும். அதன்பின்னர், பொதுக்கூட்டம், தெருமுனை, மீடியா, நிகழ்ச்சிகளில் பிரச்சாரம் செய்ய கூடாது. வீடு வீடாக ஓட்டு கேட்பதற்கு தடையில்லை. நான்கு பேருக்கு மேல் செல்லக்கூடாது. வாக்குப்பதிவு மையங்களுக்கு 100 மீட்டர் தொலைவிற்குள் போதையுடன் யாரும் வரக்கூடாது. சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை கட்டுப்படுத்துவது கடினமான விஷயம்.
முறையான கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 அடையாள ஆவணங்கள் மூலம் வாக்க்குகளை வாக்களர்கள் பதிவு செய்யலாம். பணம் வாங்காமல் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை மனசாட்சியுடன் பதிவு செய்யவேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.