ஆனால், திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இலக்குகளை எட்டுவதில் கண்ணுக்குத் தெரிந்த முன்னேற்றம் எட்டப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இலக்குகளை எட்ட நடவடிக்கை எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தொலைநோக்குத் திட்டம் 2023 இலக்குகளை எட்டுவதற்காக கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? என்பதை சவாலாகவே முன்வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.