விருதுநகரில் பட்டாசுத் தொழிற்சாலை விபத்து: உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு..!

வியாழன், 18 மே 2023 (17:10 IST)
விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு ரூபாய் மூன்று லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர். மு க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். 
 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊராம்பட்டி என்ற கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். 
 
மேலும் சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மூன்று லட்ச ரூபாயும் மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்