ஆசிட் வீச்சில் மரணமடைந்த வினோதினி வழக்கில், குற்றவாளிக்கு காரைக்கால் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
காரைக்காலில் வசிக்கும் ஜெயபால் என்பவர் மகள் வினோதினி, சென்னை சைதாப்பேட்டையில் தங்கி மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, சுரேஷ் என்ற கட்டிடத் தொழிலாளி, அவரை திருமணம் செய்து வைக்குமாறு வினோதினியின் பெற்றோரை வற்புறுத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், 2012ஆம் ஆண்டு, பேருந்து நிலையத்தில் நின்றிருந்த போது வினோதினி முகத்தில் ஆசிட் வீசினான். இதில் முகம் முழுவதும் வெந்து, கண் பார்வை பறி போன நிலையில், உயிருக்குப் போராடி வந்த வினோதினி, 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், காரைக்கால் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து இன்று உத்தரவிட்டனர்.