அதிமுகவின் தலைமை கழக பேச்சாளரும், நட்சத்திர பேச்சாளருமான நடிகை விந்தியா அதிமுகவில் இருந்து விலக இருப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வருகின்றன. ஆனால் விந்தியா தரப்பில் இருந்து இதற்கு எந்தவித மறுப்பும் வரவில்லை.
இதனையடுத்து அதிமுகவில் இருந்து அதிமுக கூட்டங்களில் தலையை காட்ட ஆரம்பித்தார். தனது அதிரடியான பேச்சின் மூலம் ஜெயலலிதாவின் மனம் கவர்ந்தார். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் என அனைவரையும் தனது அதிரடியான பேச்சால் வெளுத்து வாங்கினார்.
இப்படி அரசியலில் வலம் வந்து கொண்டிருந்த விந்தியா, தற்போது ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவை அம்மா, என்று அழைத்த வாய் வேறு யாரையும் அம்மா என்று அழைக்காது என முடிவெடுத்து விந்தியா அதிமுகவில் இருந்து விலக இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. விந்தியாவும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.