தேர்தலுக்கு பின் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும்: தமிழருவி மணியன்

வியாழன், 5 மே 2016 (20:14 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை இந்த தேர்தலுடன் முடிவுக்கு வரும் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.


 
 
வரும் சட்டசபை தேர்தலில் அப்துல் கலாம் லட்சிய இந்திய கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது காந்திய மக்கள் இயக்கம்.
 
திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன் திமுக, அதிமுக, மக்கள் நல கூட்டணி, தேமுதிக என அனைவரையும் விமர்சித்தார். அதிலும் தேமுதிக-மக்கள் நல கூட்டணியை கடுமையாக விமர்சித்தார்.
 
விஜயகாந்தின் ஒரு பக்கம் மனைவி இன்னொரு பக்கம் மைத்துனர் இருக்கின்றனர். அங்கு ஜனநாயகம் இருக்கிறதா? மனைவி, மைத்துனர் சேர்ந்து எடுக்கும் முடிவுக்குத்தானே விஜயகாந்த் கட்டுப்படுகிறார் என கூறிய அவர் மக்கள் நலக்கூட்டணி தனக்கான தார்மீக தகுதியை இழந்து விட்டது. விஜயகாந்த் அணி இந்த தேர்தலுடன் சிதைந்து போகும். விஜயகாந்தின் அரசியல் இந்த தேர்தலுடன் முடிவுக்கு வந்து விடும் என்று கூறினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்