தனது முதல் தேர்தலில் விருத்தசலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்றார். இரண்டாவது தேர்தலில் ரிஷ்வந்தியத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் அதிமுக கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை மீண்டும் ரிஷிவந்தியத்தில் போட்டியிட்டால் தோல்வி அடையும் என்பதால் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுகிறார்.
கடந்த இரண்டு முறையும் விஜயகாந்துக்கு இல்லாத போட்டியை இந்த முறை உளுந்தூர்பேட்டையில் அரசியல் கட்சிகள் தொடுத்துள்ளனர். திமுக, அதிமுக, பாமக என கட்சிகள் பலமான வேட்பாளரையே விஜயகாந்துக்கு எதிராக களம் இறக்கியுள்ளனர்.