இந்தியாவில் பேட்மிட்டன் போட்டியை பிரபல படுத்துவதற்காக ஐ.பில்.எல் போட்டி நடத்தப்பட்டது. அப்போது, தமிழ்நாடு சார்பாக, தான் நடத்தி வந்த சென்னை ஸ்மாசர்ஸ் அணியில், சிந்துவை விளையாட எடுத்தது தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தான்.
அந்த போட்டி நடைபெற்ற போது, விஜயகாந்த் நேரில் சென்று தொடங்கி வைத்தார். அதேபோல், இந்த ஒலிம்பிக்கில் சிந்து பங்கு கொண்ட அனைத்து போட்டிகளையும் விஜயகாந்த் ஆர்வமாக பார்த்து ரசித்தார்.