நேற்று தேமுதிக முக்கிய நிர்வாகிகள் பலர் விஜயகாந்திற்கு எதிராக பேட்டியளித்து, அவர் திமுக கூட்டணியில் சேர விஜயகாந்திற்கு கெடு விதித்தனர். உடனடியாக அவர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் விஜயகாந்த்.
திருவள்ளூர் மாவட்ட செயலாளராக இருந்த சேகரிடம் விளக்கம் கேட்காமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறிய தேமுதிக அதிருப்தியாளர்கள், விஜயகாந்த் சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறார் என குற்றம் சாட்டியுள்ளனர்.