விஜயகாந்த் சிங்கப்பூர் செல்லவில்லை - மறுக்கிறா் எல்.கே.சுதீஷ்

ஞாயிறு, 27 மார்ச் 2016 (22:54 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் செல்லவில்லை என சுதீஷ் மறுத்துள்ளார்.
 

 
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணித் தேர்வு ஆகியவைகள் தேர்வு செய்து வருகின்றனர். தமிழக தேர்தலில் இம்முறை, தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி இடையே தேர்தல் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டள்ளது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று இரவு சிகிச்சை செல்ல சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனால், இது குறித்து, தேமுதிக தலைவர் விஜயாகந்த் மைத்துனர் சுதீஷ் பேஸ்புக் பக்கத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றியும், தேமுதிகவை பற்றியும் அவதூறு செய்திகளையும், அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை சிலர் வெளியிட்டு வருகின்றனர். ஆனால், அவர் எங்கும் செல்லவில்லை என மறுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்