திருவள்ளூர் மாவட்டம் ராமபுரம், போரூர் ஆகிய இடங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அப்பகுதிகளில் வெள்ளப் பகுதிகளை பார்வையிடச் சென்ற போது பொதுமக்கள் அவரை கூட்டமாக நெருங்க முயன்றுள்ளனர்.
அப்போது ஒருவர் அவரை நெருங்க முயன்றபோது ஆவேசமடைந்த விஜயகாந்த், நாக்கை துருத்தி கையை ஆவேசமாக ஓங்கியபடி அவரை அடிக்கப் பாய்ந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், விஜயகாந்த் போன, பின்னர் அங்குயிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.