இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உடுமலைப்பேட்டையில் தலித் மாணவர் சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து வருகிற 18–ந்தேதி (வெள்ளிக்கிழமை) விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் (தொல்.திருமாவளவன்) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.தமிழகத்தில் அண்மை காலமாக சாதி விட்டு சாதி திருமணம் நடைபெறுவதை எதிர்த்து ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன.