நடிகர் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து உருவான ‘தெறி’ திரைப்படம் நேற்று ரிலீசானது. திருநெல்வேலியில் மூன்று திரையரங்குகளில் அந்த படம் நேற்று திரையிடப்பட்டது.
இந்நிலையில், திருநெல்வேலி ரயில்வே நிலையம் அருகே உள்ள திரையரங்கில் அந்த படம் திரையிடப்பட்டது. இதனால், விஜய் ரசிகர்கள் காலை முதலே தியேட்டரில் குவிந்தனர். விஜயை வாழ்த்தி பேனர் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் ஆகியவற்றை வைத்திருந்தனர்.
காற்று பலமாக வீசியதால்தான் கட் அவுட் சரிந்து விழுந்ததாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக, அந்த வாகனத்தில், காவலர்கள் யாரும் இல்லாததால் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை.