விரைவில் சிக்கப்போகும் மதன்: கூட்டாளி நீதிமன்றத்தில் ஆஜர்!

திங்கள், 26 செப்டம்பர் 2016 (19:24 IST)
மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக மாணவர்களிடம் ரூ.80 கோடி வாங்கி மோசடி செய்த மதன், மாயமாகி பல மாதங்கள் ஆகிறது. 



 
 
மதன் மாயமானவுடன், அவரது கூட்டாளியான சுதிரும், தலைமறைவானார். மதனின் பணவர்த்தனையில் சுதிருக்கும் முக்கிய பங்கு இருந்துள்ளதை அறிந்த காவல்துறையினர், அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அவர் கடந்த வெள்ளிக்கிழமை, ஆந்திரா மாநிலத்தில் காவல்துறையினரிடம் சிக்கினார்.
 
அவரை, காவல்துரையினர் இன்று சைதாப்பேட்டை குற்றிவியல் நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, சுதிரை, அக்டோபர் 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்