இளம் பெண்ணால் வலையில் சிக்கிய வேந்தர் மூவிஸ் மதன்...

திங்கள், 21 நவம்பர் 2016 (14:53 IST)
வேந்தர் மூவிஸ் மதன் மே மாதம் 29ஆம் தேதி, காசியில் சமாதி அடையப் போகிறேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானர். 


 

 
மாணவர்களிடம் மருத்துவ சீட்டிற்காக, அவர்களிடம் ரூ.70 கோடி வாங்கிவிட்டு, மோசடி செய்தவர் மதன். சென்னை, எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்க்க வேந்தர் மூவிஸ் மதனிடம் பலர், பல லட்சக்கணக்கில் பல கோடி ரூபாய் கொடுத்ததை, மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
மதனை, அவரின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் தேடி வந்தனர். ஆனால் பல மாதமாகியும் அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.  
 
இந்நிலையில் தற்போது மதன் தனிப்படை போலீஸாரால் மணிப்பூர் அருகே பிடிப்பட்டார் எனவும், மேலும் மதன் ரகசிய விசாரணையில் உள்ளார் எனவும் செய்திகள் வெளியானது.
 
ஆனால், அவர் மணிப்பூரில் கைது செய்யப்படவில்லை என்றும் திருப்பூரில் ஒரு இளம்பெண்ணை சந்திக்க சென்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார் என தமிழக காவல்துறை ஆணையர் ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
 
மதன் சந்திக்க சென்ற பெண், சென்னையை சேர்ந்தவர் என்பதும், அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்