வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால், பறவைகள்வரத்து குறைந்து போனது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகையும் சுருங்கிப்போனது. இவைகள் காரணமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாயலம் மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
ஆனால், ஏரியில் போதிய தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக வெளியட்டு பறவைகளின் வருகை வழக்கத்தைவிட குறைந்து போனது. கடந்த ஆண்டு 35 ஆயிரமாக இருந்த வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெறும் 5 ஆயிரமாக குறைந்து போனது. இதனால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் குறைந்து போனது.
இதனால், கலை இழந்து காணப்பட்ட, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை மே 30 ஆம் தேதி முதல் மூடப்படுகிறது. இனி அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும்போது தான், வெளிநாட்டு பறவைகளின் வருகையை பொறுத்து சரணாலயம் திறக்கப்படும் சூழ்நிலை நிலவுகின்றது.