பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது ஒரு சராசரியான தேர்தல் அல்ல என்றும், வலதுசாரி சக்திகளை தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுப்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.
எங்களுடைய பங்களிப்பிற்கு ஏற்ப அதிகார பகிர்வு அமைய வேண்டும்" என்ற கோரிக்கையை மனம் திறந்து முன்வைத்துள்ளதாக அவர் கூறினார். விசிகவின் கருத்துகளை கேட்டுக்கொண்ட திமுக குழுவினர், முதலமைச்சருடன் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமான முறையில் அமைந்ததாக திருமாவளவன் மகிழ்ச்சி தெரிவித்தார்.