வர்தா புயல்: உதவி எண்கள் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (20:53 IST)
வர்தா புயல் தீவிரமடைந்துள்ளதால் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வர்தா புயல் தொடர்பாக, உதவிக்கு எண்களை சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது.


 

 
வர்தா புயல் தீவிரமடைந்துள்ளதால் நாளை சென்னை மற்றும் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. தேசிய, மாநில மீட்புகுழுவினர் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முப்படை தேவைகள் பயன்படும் போது பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
புயல் தொடர்பான பணிகளை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வர்தா புயல் தொடர்பாக, உதவிக்கு எண்களை சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது.
 
044-25619206, 25619511, 25384965, 25383694, 25367823, 25387570
 
வாட்ஸ் அப் எண்கள்: 
 
9445477207, 9445477203, 9445477206, 9445477201, 99445477205
 
மின்னஞ்சல் முகவரி
gccdm1@chennaicorporation.gov.in
gccdm2@chennaicorporation.gov.in
gccdm3@chennaicorporation.gov.in
gccdm4@chennaicorporation.gov.in
gccdm5@chennaicorporation.gov.in
 
இவைகளை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், 1070 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
அடுத்த கட்டுரையில்