வேன் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்

ஞாயிறு, 5 ஜூன் 2016 (10:43 IST)
மயிலாடுதுறை அருகே வேன் கவிழ்ந்து 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
 

 
புதுவையிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சிலர் வேன் மூலம் சென்றனர். திருநின்றியூரில், வேன் சாலையில் வேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில், 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அங்கிருந்தவர்கள் உடனே மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனை அட்மிட் செய்தனர்.
 
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், படுகாயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்