நீண்ட நாட்களுக்கு நீடித்துவந்த ஜல்லிக்கட்டு தொடர்பான சர்ச்சை நேற்று முடிவிற்கு வந்தது. நேற்று தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து அறிவிக்கை வெளியிட்டது. இந்த அறிவிப்பு, இந்த ஆண்டு பொங்கல் மற்றும் ஜல்லிக்கட்டு விழாக்கள் தொடர்பாக மக்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வைகோ, ஜி.கே.வாசன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நன்றி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து அவர்களும் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது.