மக்கள் நலக்கூட்டணி தனது அடிகளை தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்து வைத்து வருகிறது. எங்களுக்குள் எந்தவித பூசலோ, சச்சரவுகளோ எழவில்லை என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளது. எனவே மக்கள் பிரச்னைக்காக களம் இறங்கியுள்ள எங்கள் கூட்டணிக்கு எதிரான செய்திகளை வெளியிடாமல் ஊடகங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் எக்காரணத்தைக் கொண்டும் நாங்கள் அதிமுக அல்லது திமுகவுடன் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும் வைகோ தெரிவித்தார்.