தேனி நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு எதிராக வைகோ வழக்கு

புதன், 21 ஜனவரி 2015 (12:11 IST)
தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரையில் கிளையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார்.
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்தால் அருகில் உள்ள அணைகள் பாதிக்கப்படும் என்றும், இந்த ஆய்வு மையத்தால் பொட்டிபுரம் பகுதியில் விவசாய நிலம் பாதிக்கப்படும் என்று மனுவில் கூறியுள்ளார்.
 
இதனால் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்