சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுடன் தொடர்ந்து 12 நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணல் இன்றுடன் நிறைவடைந்தது. அதன்பின், கலைஞர் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது செய்தியாளர்கள், திமுக - தேமுதிக கூட்டணி முடிவாகிவிட்டதா? என்று கேட்டதற்கு, ”பழம் கனிந்து கொண்டிருக்கிறது. பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை” என்று தெரிவித்தார்.