வடலூர் தைப்பூச திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

ஞாயிறு, 16 ஜனவரி 2022 (18:28 IST)
வடலூர் வள்ளலார் கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா அன்று நடைபெறும் ஜோதி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி கிடையாது என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
கடலூர் மாவட்டத்திலுள்ள வடலூர் வள்ளலார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறும்
 
தைப்பூசத்தன்று 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வடலூர் வள்ளலார் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் அனுமதி கிடையாது என்றும் ஆனால் அதே நேரத்தில் https://www.youtube.com/channel/UCEiJozGGHgOZFISkQAOB93A  என்ற யூட்யூபில் நேரடியாக தைப்பூசத் திருவிழா ஒளிபரப்பாகும் என்றும் பக்தர்கள் வீட்டிலிருந்து தைப்பூசத் திருவிழாவை கண்டு வணங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்