இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் பழனியை சேர்ந்த மணிகண்டன், மதன், செல்வகுமார், ஜெகதீசன் ஆகியோர் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணையில் பிடிபட்ட மணிகண்டன், மதன், செல்வகுமார், ஜெகதீசன் ஆகியோர் கௌசல்யாவின் தந்தைக்கு நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. விசாரணை இவர்கள் கூறும்போது, கௌசல்யாவின் தந்தை தனது மகள் ஏமாற்றிவிட்டு காதல் திருமணம் செய்துவிட்டாளே என்று புலம்பி வந்தார். இதனால் அவருக்கு உதவி செய்யும் நோக்கில் கௌசல்யாவை அழைத்து வரச் சென்றோம். ஆனால் அவர் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த நாங்கள் அவர்களை வெட்டினோம் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.