17-6-2015 அன்று வந்த செய்தியில், "தூத்துக்குடி மாவட்டத்தில், உடன்குடியில், தலா, 660 மெகாவாட் திறனுடன் இரண்டு அலகுகள் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான டெண்டர் கோரப் பட்டது. இந்த டெண்டரில் பாரதக் கனரக மின் நிறுவனமான "பெல்", மற்றும் சீன-இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆகியவை கலந்து கொண்டன. "பெல்" நிறுவனத்தை விட, குறைவான தொகையை, சீன நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அந்த நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குவதற்குப் பதில், அந்த நடவடிக்கையை ரத்துச் செய்து, தமிழக மின் வாரியம் உத்தரவிட்டது. இதற்கான உத்தரவு கடந்த மார்ச்சில் பிறப்பிக்கப்பட்டது. தொழில் நுட்பக் குறைபாடுகள் இருப்பதால், இரு நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளியை ரத்துச் செய்வதாகக் கூறப்பட்டது.