இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”விருத்தாசலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக, ஆளுக்கு 300 ரூபாய் ரொக்கமும், பிரியாணி பொட்டலமும் கொடுத்து பல இடங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்த காரணத்தால், வெளியேற முயன்ற போது காவல் துறையினர் அவர்களை வெளியே விட மறுத்ததால், நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியாகி இருக்கிறார்கள்.
மேலும் 17 பேர் மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டுள்ளார்கள். நெரிசலில் சிக்கிப் பலியான இறந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், மருத்துவமனையிலே சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.