அழகியுடன் உல்லாசமாக இருக்க போட்டி - இரண்டு வாலிபர்கள் மோதல்

செவ்வாய், 29 நவம்பர் 2016 (12:58 IST)
கன்னியாகுமரி அருகே அழகியுடன் உல்லாச போட்டியில் 2 வாலிபர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 
 
கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு இரவு-பகல் எந்த நேரமும் ஆண்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை எச்சரித்தனர். இதனையடுத்து சில நாட்கள் யாரும் வராமல் இருந்ததாக கூறப்படுகிறது.
 
இந்தநிலையில், மதிய வேளையில் வாலிபர் ஒருவர் இருசக்கரவாகனத்தில் வந்தார். சர சர வென நடந்து சென்று அந்த பெண்ணின் வீட்டு கதவை தட்டினார். நீண்ட நேரதிற்கு பிறகு கதவு திறந்தது. ஆனால் பெண் வருவார் என்று எதிர்பார்த்த அந்த வாலிபர், திடீரென மற்றொரு வாலிபர் வீட்டு கதவை திறந்ததால் கோபம் அடைந்தார். 
 
அப்போது, இரண்டு வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது. சத்தம் கேட்டு கூடிய பொதுமக்கள், அழகியுடன் உல்லாசம் அணுபவிக்க வாலிபர்கள் வந்திருந்ததை தெரிந்து கொண்டனர். இதுகுறித்து, காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
 
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 2 வாலிபர்களையும் எச்சரித்து அங்கிருந்து விரட்டியடித்தனர். மேலும் அந்த பெண்ணிற்கும் எச்சரிக்கை விடுத்து விட்டு சென்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்