திருப்பூர் அருகே பேருந்து விபத்து: 2 பேர் பலி, 40 பேர் படுகாயம்

திங்கள், 19 பிப்ரவரி 2018 (16:36 IST)
திருப்பூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலியாகினர், 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
 
கொடுவாய் அருகில் சத்தியமங்கலத்தில் இருந்து திருப்பூர் வழியாக தாராபுரம் சென்ற தனியார் பேருந்தும், தாராபுரத்தில் இருந்து திருப்பூரை நோக்கி வந்த தனியார் பேருந்தும் ஒன்றுக்கொன்று நேராக மோதி விபத்துக்குள்ளானது.
 
இந்த விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த பயணிகளை பொதுமக்கள் மீட்டு திருப்பூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் இந்த விபத்து குறித்து ஊதியூர் காவல்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்